மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, சிபிஐ பொதுச் செயலாளர் து.ராஜா ஆகியோரை கைது செய்ததைக் கண்டித்து கட்சியின் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியக் குழு சார்பாக ஒன்றிய செயலாளர் எம்.ஜி.ரவிச்சந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் மண்ணச்சநல்லூர் கடைவீதியில் நடைபெற்றது.